தாமரை கோபுரத்தில் பெயர்களை கிறுக்கி சேதப்படுத்திய காதலர்கள் கைது

#SriLanka #Arrest #Love #couple #lotus tower
Prasu
10 months ago
தாமரை கோபுரத்தில் பெயர்களை கிறுக்கி சேதப்படுத்திய காதலர்கள் கைது

தாமரை கோபுரத்தில் தங்கள் அடையாளங்களை பொறிக்க முயன்ற காதலர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தாமரை கோபுரத்தில் தங்கள் பெயர்களை கிறுக்கி அதனை சேதப்படுத்திய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மே30 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தாமரை கோபுரத்தில் கிறுக்குதல் அதனை சேதப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.