யாழ் வைத்தியசாலை தீவிபத்து சம்பவத்தில் உள்ள மர்மம் - பிரதி சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

#SriLanka #Jaffna #Investigation #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
யாழ் வைத்தியசாலை தீவிபத்து சம்பவத்தில் உள்ள மர்மம்  - பிரதி சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!

யாழ் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து உரிய விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். 

 யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில், அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா  கேள்வி எழுப்பியமைக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பிரதி சுகாதார அமைச்சர்,  யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து அபாயகரமானதாகும். 

 குறிப்பாக மருந்துகள் தொடர்பான விபரங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றபோது இந்த சம்பவம் பதிவானமை, மிகவும் அபாயம் மற்றும் சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்படுகின்றது. 

 பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் குறித்த சந்தர்ப்பத்திலேயே சுகாதார அமைச்சுக்கு முறைப்பாட்டை வழங்கியிருந்தார். 

 இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறும் அப்போதே பணிக்கப்பட்டது. விரைவில் அந்த விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4