எல் நினோ மத்தியிலும் தடையில்லா மின்சாரம்: அரசாங்கம் தீவிர நடவடிக்கை!
எல் நினோ வானிலை தாக்கத்திற்கு மத்தியிலும், நாட்டில் எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய மதிப்பீடுகளின்படி எல் நினோ நிலைமையினால் நீர்மின் உற்பத்தியில் மட்டுமே ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மின் உற்பத்தியில் சுமார் 127 மணித்தியாலங்கள் குறைவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த பற்றாக்குறையை மாற்று வலுசக்தி மூலங்கள் (Alternative energy sources) ஊடாக ஈடுசெய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் மின்வெட்டை அமுல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, எல் நினோ நிலைமையினால் வலுசக்தி துறைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கும், எழும் சவால்களுக்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே