கடனே இல்லாமல் ரூ. 1,500 கோடியில் நவீனமயமாகும் கட்டுநாயக்க விமான நிலையம்!

#SriLanka #Airport #Lanka4 #AnuraKumaraDissanayake #Katunayaka #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கடனே இல்லாமல் ரூ. 1,500 கோடியில் நவீனமயமாகும் கட்டுநாயக்க விமான நிலையம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) முதலாவது முனையத்தை (Terminal 1) முற்றிலும் நவீனமயமாக்குவதற்கான 15 பில்லியன் ரூபா (1,500 கோடி) மதிப்பிலான பிரம்மாண்ட திட்டத்தை இலங்கை அரசாகம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது. 

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருவதால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வெளிநாட்டுக் கடன்களையும் நம்பியிருக்காமல், உள்நாட்டு அரச நிதியைக் கொண்டே (மக்கள் வரிப்பணம்) இந்த மேம்பாட்டுப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதன் கீழ், புறப்பாடு மற்றும் வருகை முனையங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், அதிநவீன லக்கேஜ் சிஸ்டம் மற்றும் விரைவான குடிவரவு (Immigration) சோதனைகளுக்கான வசதிகளும் நிறுவப்படவுள்ளன. 

தற்போது ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளைக் கையாளும் இந்த முதலாவது முனையத்தின் திறன், இப்பணிகள் நிறைவடையும் போது 15 மில்லியனாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுராவின் ஆட்சி கடன் இல்லாமல் செயல்படுவதற்காகப் புகழப்படுகிறது முந்தைய அரசாங்கங்கள் கடன்களைப் பெற்று, அந்தப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் தங்கள் சுயலாபத்திற்காகக் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது 

ஆனால் தற்போதைய அரசு, கடன்களின்றி ஒரு இடத்திலிருந்து நிதியைப் பெற்றுப் பணிகளைச் செய்துள்ளது இத்தகைய செயல்பாடுகளால், #அனுராவின் ஆட்சி நிச்சயமாக இன்னும் 25 ஆண்டுகளுக்குத் தொடரும் என்று லங்கா 4 ஊடகம் தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4