இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில்

Prathees
2 years ago
இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) மூலம் அளவிடப்படும் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் சாதனையாக 29.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஆகும்.மார்ச் மாதத்தில் பணவீக்கம் 18.7 சதவீதமாக இருந்தது.

மொத்தப் பணவீக்கத்தைக் குறிக்கும் உணவுப் பணவீக்கம், 2022 மார்ச்சில் 30.2 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 46.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2022 மார்ச்சில் 13.4 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஏப்ரலில் 22 சதவீதமாக கடுமையாக உயர்ந்துள்ளது.

அதன்படி, மார்ச் மாதத்தில் 164.9 புள்ளிகளாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஏப்ரல் மாதத்தில் 9.3 சதவீதம் அதிகரித்து 16.2.20 புள்ளிகளாக இருந்தது.

பால் மா, அரிசி, ரொட்டி, பருப்பு, சர்க்கரை மற்றும் உலர் பொருட்களின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் உணவு வகை பொருட்களின் விலையில் அதிகரித்தன.