துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

Prabha Praneetha
2 years ago
துப்பாக்கிச் சூட்டு  சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு

நேற்றிரவு அஹங்கம மற்றும் லுனுகம்வெஹரவில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்தனர். அஹங்கமவில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து ஒருவர் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அஹங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 19 வயதுடைய இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை, லுனுகம்வெஹர, பதவிகம பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், தனிப்பட்ட தகராறு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மைத்துனரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.